மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நேற்றைய தினம் டிவி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த 20லட்சம் கோடி சிறப்பு திட்டங்களின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை குறித்து பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கு இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த டுவீட்டுக்கு பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…