தனது மாமாவை கொலை செய்தார் வடகொரிய அதிபர் கிம்??- ட்ரம்ப் தகவல்!

Published by
Surya

வடகொரிய அதிபர் கிம், தனது சொந்த மாமாவை எப்படி கொலை செய்தார் என தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளதாக “வுட்வேர்ட்” என்ற பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும், பொது இடங்களில் அவர் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அதனை பொய் என நிருப்பித்து, அவர் ஒரு தொழிற்சாலையை திறக்கும் புகைப்படம் வெளியானது.

இதனையடுத்து, தான் இறந்துவிட்டதாக கூறும் செய்திக்கு அவர் முற்றுபுள்ளி வைத்தார். அதுமட்டுமின்றி, அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

அதனையும் பொய் என நிரூபித்து, அதிபர் கிம் ஜாங் உன் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் பேசினார். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனால் தாம் இறந்துவிட்டதாக கூறும் வதந்ததிகளுக்கு அவர் மேலும் முற்றுபுள்ளி வைத்தார்.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தாண்டு ஜூலை வரை நடத்தப்பட்ட நேர்காணலை வைத்து “வுட்வேர்ட்” என்ற பத்திரிகையாளர், “ரேஜ்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர், வடகொரிய அதிபர் கிம், தனது மாமாவை கொலை செய்ததாக அந்த புத்தகத்தில் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில், வடகொரிய அதிபர் கிம் பற்றிய கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில்தான் சந்தித்ததாக கூறினார். மேலும், அவர் மிக புத்திசாலியான என குறிப்பிட்ட ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம்மின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தன்னிடம் பகிர்ந்துள்ளதாகவும், அதேபோல் அவரின் சொந்த மாமாவை எப்படி கொலை செய்தார் எனவும் தன்னிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Surya
Tags: kimtrump

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago