கோலாகலத்துக்கு தயாராகும் கும்பகோணம்.!மாற்றத்தை அருளும் மாசிமகம் என்னைக்கு! தெரியுமா??

Published by
kavitha
  • மாசிமாதத்தில் மகத்திருவிழாவிற்கு தயாரகிறது கோவில்களின் நகரமாக காட்சித் தரும் கும்பகோணம்
  • மாசிமகத்திருவிழா வரும் மார்ச்- 8ந்தேதி நடைபெறுகிறது என்று மகாமக அறக்கட்டளை பத்திரிக்கை வெளியிட்டுள்ளனர்.

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற மாசி மகப் பெருவிழா நடப்பாண்டில்  மாா்ச் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று  நடைபெற்றது. தென் பாரத கும்பமேளாவின் மகாமக அறக்கட்டளைத் தலைவா் பி.கே. கல்யாணசுந்தரம் இப்பத்திரிக்கை விழாவிற்கு தலைமை ஏற்றார்.

இந்நிலையில் இவ்விழாவானது முறைப்படி சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிப். 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, காலை, இரவில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

Image result for கும்பகோணம் மாசிமகம்

அதே போல் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாா்ச் 7ந்தேதி தேரோட்ட நிகழ்வும்,மாா்ச் 8ந்தேதி ஸ்ரீசக்கரபாணி கோயிலில்  தேரோட்டமும் நடைபெறகிறது.மேலும், மாசிமக நாளான மாா்ச் 8ந்தேதி அதிகாலை 4 மணி முதல் மகா மகக்குளத்தில் பக்தா்கள் புனித நீராடத்தொடங்கி விடவார்கள்

இதனைத்தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரா் உள்ளிட்ட சிவன் கோயிலின் மூா்த்திகள் மகாமகக் குளத்தில் எழுந்தருளும் தீா்த்தவாரி வெகுச்சிறப்பாக நடைபெறும்.இதனை கண்டு தரிச்சிக்கும் போதே மெய்சிலிர்க்கும் சரியாக  மாலை 5 மணிக்கு ஆன்மிக ஊா்வலம் நடைபெறும் அவ்வாறு ஊர்வலமாக மகாமக குளக்கரையில் வலம் வந்து மாலை 6 மணிக்கு  ஆரத்திப் பெருவிழா மகாமகக் குளத்தில் நடைபெறகிறது.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago