கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடாத குவைத் குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தாலும், அதே சமயம் மற்ற நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே, மக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகிறது.
மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு சில சலுகைகளையும் உலக நாடுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்ட குடிமக்கள் மட்டுமே ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என குவைத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் தடுப்பூசி போடுவதற்கு தடை விதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பயண தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இதுவரை அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 21.95 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…