16 ஆண்டுகளுக்கு பிறகு ரீ – என்ட்ரி கொடுக்கும் லைலா.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் பிதாமகன், நந்தா, தீனா, போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை லைலா. இவர் கடந்த 2006-ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டு திரையுலகினை விட்டு விலகினார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடைசியாக 2006ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த நிலையில், லைலா 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தின் மூலம் ரீ -என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அதன்படி, இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ் மித்ரன் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து “சர்தார் “என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். படத்தில் இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார்.

மேலும், இப்படத்தின் மூலம் 16 ஆண்டு இடைவேளைக்கு பிறகு நடிகை லைலா சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறார். இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago