அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தன்னிடம் பணம் இன்றி தவித்து வந்துள்ளான். உடனே அவன் தனக்கு ஒரு 50 டாலர் பணம் தேவைப்படுகிறது என அதனை தந்து உதவ வேண்டும் என கடவுளுக்கு கடிதம் எழுதியுள்ளான்.
ஆனால், கடவுள் முகவரி தெரியாததால், பெறுநர் படிவத்தில், கடவுள், அமெரிக்கா என எழுதி அனுப்பிவிட்டான். இதனை பார்த்த தபால்துறையினர், இந்த கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவிட்டனர்.
இந்த கடிதத்தை பார்த்த அமெரிக்க அதிபர். இந்த சிறுவனின் அறியாமையை கண்டு, பணம் அனுப்ப எண்ணினார். ஆனால் இவன் சிறுவன் ஆதலால் 50 டாலர் அனுப்ப வேண்டாம். ஒரு 20 டாலர் மட்டும் அச்சிறுவனுக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளை மாளிகை முகவரியில் இருந்து இந்த 20 டாலர் அச்சிறுவனுக்கு சென்றடைந்தது.
அதனை கண்ட அச்சிறுவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து கடவுளுக்கு நன்றி எழுதினான். அதனை கண்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த கடிதத்தில், ‘ கடவுளே எனக்கு நீங்கள் பணம் அனுப்பியுள்ளீர்கள் மிகவும் நன்றி. ஆனால், அடுத்த முறை பணம் அனுப்பும் போது, வெள்ளை மாளிகை மூலம் அனுப்ப வேண்டாம். ஏனென்றால், நீங்கள் அனுப்பிய 50 டாலரில் இருந்து, 30 டாலரை எடுத்துக்கொண்டு 20 டாலரை மட்டுமே எனக்கு அனுப்பிவைத்தனர். ஆதலால் இனி எனது முகவரிக்கே அனுப்பிவிடுங்கள் என அந்த கடிதத்தில் எழுதி உள்ளான் அந்த சிறுவன்.
மேற்கண்ட இக்கதை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்பது பற்றி தெரியாவில்ல்லை. ஆனால் நடப்பு உலகம் அப்படிதான் இருக்கிறது.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…