தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன். கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. நடித்த இரண்டு படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு காரணம் இவரது கவர்ச்சியான போட்டோஷூட் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஊரடங்கு காரணமாக லண்டனில் தனது சகோதரர் ஊருக்கு வர இயலாமல் தனியாக இருப்பதாகவும், தேவையான பொருட்கள் கூட வாங்க இயலாமல் கஷ்டப்படுவதாகவும், அதனால் தான் கவலையில் உள்ளாகியுள்ளதாகவும் கூறி மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு விமான சேவைகள் இயங்கியதை அடுத்து சகோதரர் இந்தியா வந்தடைந்ததாகவும், ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது படி, அவர் ஓட்டலில் தங்கியுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…