முதலில் கொரோனா சீனாவில் உள்ள மக்களை தான் பாதித்தது. இந்த நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர் கூறியுள்ளனர்.
சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8% பேர் உயிரிழந்துள்ளனர். பெண்களில் 1.7% பெண்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பியாவிலும் உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
இதற்க்கு காரணம், பெண்களை போல் ஆண்கள் கை கழுவும் பழக்கத்தை கடைபிடிப்பதில்லை. அவர்கள் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பதாலும், மருத்துவமனைக்கு செல்வதற்கு கால தாமாதம் செய்வதையும் காரணமாக கூறுகின்றனர்.
ஆனால், இந்த காரணங்களை தாண்டி, அபாயங்களை மேற்கொள்ள ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்க்கு உதாரணம் என்னவென்றால், உலகில் 100 வயதையும் தாண்டி வாழும் பெண்களில் 80% பேர் பெண்கள் தான். இதற்க்கு காரணம், பெண்களில் குரோமோஸோம்களில் தான் இவர்களின் பலம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெண்களின் குரோமோசோம்களில் இரண்டு x குரோமோசோம்கள் உள்ளன. ஆனால் ஆண்களின் குரோமோசோம்களில் ஒரு x குரோமோசோம்கள் தான் உள்ளது.இந்த குரோமோசோம்கள் தான், மனிதர்களின் மூளை வளர்ச்சி பராமரிக்கிறது. மேலும், இது தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் வேலையை செய்கிறது.
பெண்களிடம் காணப்படும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆண்களிடம் காணப்படும், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு திறனை தடுக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…