நல்ல மனிதராக தோற்றவர் முத்தையா – அவர் கதாபாத்திரத்தில் நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம்!

Published by
Rebekal

நல்ல மனிதராக தோற்றவர் முத்தையா முரளிதரன், அவர் கதாபாத்திரத்தில் நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் 800 எனும் தலைப்பில் திரைப்படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கிறார். இந்நிலையில் இவரது நடிப்பிற்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பான கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், முத்தையா முரளிதரன் இலங்கையில் தமிழர் இனவழிப்பு செய்யப்பட்ட நாள் தனக்கு மகிழ்ச்சிகரமான நாள் என கூறியதால் இவரது வார்த்தைக்கு பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என உலகெங்கிலும் வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வரக் கூடிய நிலையில் விரைவில் இது குறித்து விஜய் சேதுபதி நல்ல கருத்துகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வரான ராமசாமி என்பவர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், ஒரு நல்ல மனிதன் எனும் இடத்தை விட்டுக் கொடுத்தவர். அதாவது நல்ல மனிதராக தோல்வி அடைந்து விட்டார். அதனால் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிப்பது தமிழர்களை அவமதிப்பதுக்கு சமம் என அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலவற்றிலும் வரவேற்பு பெற்று வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

42 minutes ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

1 hour ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

2 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

2 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

3 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

4 hours ago