கொரோனாவுடன் சேர்ந்து குழந்தைகளை தாக்கும் புதிய நோய் – அதிர்ச்சியில் அமெரிக்கா

Published by
பாலா கலியமூர்த்தி

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுடன் சேர்ந்து புதிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

உலக முழுவதும் மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கே இன்னும் தடுப்பு மருந்துகளே கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாவுடன் சேர்ந்து புதிய வகை அலர்ஜி நோயும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்த புதிய அலர்ஜி நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று ஐரோப்பிய நாடுகளிலும் கூட குழந்தைகளுக்கு கொரோனாவுடன் சேர்ந்து இந்த அலர்ஜியும் தாக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூஸ் கியூமோ கூறுகையில், குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுடன் சேர்ந்து புதிய வகை அலர்ஜி நோயும் தாக்குகிறது. இது ஒரு புதிய வகை நோய் என்றும் இதனால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது எனவும் கூறியுள்ளார். இந்த நோயால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. இந்த நோய் ‘பீடியாட்ரிக் மல்டி சிஸ்டம் இன்பிளமேட்ரி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 5 மற்றும் 7 வயதான 2 சிறுவர்கள் மற்றும் 18 வயதான பெண் உள்ளிட்ட என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்று, நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் மேலும் 16 மாகாணங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய வகை நோய் இனி வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தாலும் சாப்பிடுவதில் சிக்கல், அடி வயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சுவாசிப்பதில் சிக்கல், தோல் நிறத்தில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை அணுக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

17 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

3 hours ago