ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை, ஆன்லைனில் முன்பதிவு செய்தல், மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து கீழே காண்போம்.
வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் புக்கிங்:
அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும்,ஸ்கூட்டர்க்கான தொகையையும் செலுத்திக் பெற்றுக் கொள்ளலாம்.
சிக்கல்:
இதனையடுத்து,ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆன்லைனில் விற்பனைக்கு வைக்க முயன்ற பிறகு, செப்டம்பர் 9, 2021 இல் இணையதளம் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது.இதனால்,விற்பனையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தது.
இன்று முதல்:
இந்நிலையில்,ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று முதல் விற்பனைக்கு வரவுள்ளது.அதன்படி,ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 10 வண்ணங்களில் வருகின்றன.மேலும்,இவை இந்தியாவில் உள்ள 1,000 நகரங்களில் ஓலா நிறுவனத்தால் நேரடியாக வழங்கப்படும்.
ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பவிஷ் அகர்வால் ட்விட்டரில் ஸ்கூட்டர் விற்பனையை திறந்து வைத்தார்.
விலை:
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகியவை FAME-II மற்றும் மாநில மானியங்களுக்கு தகுதியானவை, எனவே சில நகரங்களைப் பொருத்து அதன் விலைகள் குறைக்கப்படும்.அதன்படி,டெல்லியில், ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ .85,009, குஜராத்தில் ரூ .79,000 ஆகும். இதனையடுத்து பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் S1 ஸ்கூட்டர்களுக்கான மாதாந்திர தவணைகள் (EMI கள்)ரூ .2,999 க்கும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்பட்ட பதிப்பான ஓலா எஸ் 1 ப்ரோவிற்கு, இ.எம்.ஐகள் ரூ. 3,199 முதல் தொடங்கும்.S1 வகை ஸ்கூட்டரின் அதிகபட்ச விலை ரூ.99,999 மற்றும் S1 Pro வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது உள்ள பல பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட மிகவும் மலிவு விலையில் உள்ளது.
சிறப்பம்சம்:
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…