ராகவா லாரன்ஸ் தனது குருவான சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக தனது முயற்சியால் மற்றும் கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். தன்னுடைய படங்களிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி மாற்று திறனாளிகளின் திறனை வெளி கொண்டு வருவதற்காக பல உதவிகளை செய்து வருகிறார். நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மனித நேயமுள்ள மனிதராகவும் விளங்குபவர் ராகவா லாரன்ஸ். தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கிலும் கோடி கணக்கில் நிதியுதவி வழங்கிய ஒரே நடிகர் ராகவா லாரன்ஸ்.
சினிமாவில் வருவதற்கு முன்பு வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல கஷ்டப்பட்ட இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த உதவியால் தான் சினிமாயுலகில் குரூப் டேன்சராக அறிமுகமானார். ரஜினிகாந்த் அவர்கள் செய்த உதவியை இன்றும் மறக்காமல் ராகவா லாரன்ஸ் பல மேடைகளில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் உழைப்பாளி படத்திலுள்ள ‘உழைப்பாளி இல்லாத நாடு தான்’ பாடலில் ரஜினியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.
மேலும் அதனுடன் நான் ஒரு குரூப் டேன்சராக இருந்த போது உழைப்பாளி திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது என் குருவுடனான இனிமையான நினைவுகள். கடின உழைப்பு ஒரு போதும் தோல்வியடையாது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…