சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் இன்று அமேசான் பிரேமில் வெளியாகியுள்ள நிலையில் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இன்று அமேசான் பிரேமில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் . மேலும் ஊர்வசி , கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் . திரையரங்குகளில் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஓடிடியில் இன்று கண்டு கழிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசிப்பவர் நெடுமாறன் ராஜாங்கம் . நெடுமாறனாக நடித்திருக்கும் சூர்யா எளிய ஆசிரியரான ராஜாங்கம் அவர்களின் மகன் . தந்தை ராஜாங்கம் தனது சொந்த ஊருக்கு மின்சாரம் கொண்டு வரவும், சோழவந்தான் ஊரில் ரயில்கள் நிற்கவும் பல கோரிக்கைகளை அரசாங்கத்திடம் மனு எழுதி கேட்கிறார் . இதே போன்று மாறன் என்னும் சூர்யாவிற்கு ஏழை முதல் பணக்காரன் என அனைவரையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பது தான் கனவு . அந்த கனவிற்கு துணையாக நின்று சூர்யாவை உற்சாகப்படுத்துபவர் சுந்திரியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளி . இவருக்கு பேக்கரி ஒன்றை அமைத்து அதன் முதலாளி ஆக வேண்டும் என்பதே ஆசை . இருவரின் கனவும் நிறைவேறுமா என்பதே படத்தின் கதை .
படத்தை பார்த்த அனைவரும் சூர்யா அருமையாக நடித்திருப்பதாகவும், இதுவரை பார்க்காத சூர்யாவை திரையில் பார்க்க முடிந்ததாகவும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பலர் படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . அதில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட பதிவில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனவாய் காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்கவிட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதழ்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்க வைத்துவிட்டது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் அருண் விஜய்யின் டுவிட்டர் பதிவில் , சூரரை போற்று படத்தில் சூர்யா மிகவும் பிரமாதமாக நடித்துள்ளார் . அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாக நடித்துள்ளனர் . மிகவும் ஊக்குவிக்கம் வகையில் இயக்கியுள்ள இயக்குநர் சுதா கொங்கராவிற்கு மற்றும் அவரது படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் . மேலும் உயரமாக பறந்து கொண்டே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் யோகி பாபு வெளியிட்ட பதிவில் அருமையான நடிப்பு என்றும் , நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் சார் என்றும் கூறினார். மேலும் 2020-ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படங்களில் ஒன்று . கண்டிப்பாக சூரரை போற்று திரைப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை போன்று பலர் சூரரை போற்று திரைப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் , சூர்யாவின் சிறப்பான நடிப்பிற்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…