முடியின் அழகை பராமரிக்க உதவும் ஆரஞ்சு …, பயன்படுத்தும் முறை அறியலாம் வாருங்கள்..!

Published by
Rebekal

ஆரஞ்சு பழம் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்  காணப்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் நமது உடல் அழகுக்கும் எப்படி பயன்படுத்துவது, ஆரஞ்சு பழ தோல் வைத்து எப்படி எண்ணெய் தயாரிப்பது, ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க், கண்டிஷனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆரஞ்சு எண்ணெய்

ஆரஞ்சு பழங்கள் இரண்டை எடுத்து அதனை நன்றாக பிழிந்துவிட்டு அதன் தோலை பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த தோலை அரைத்து தூள் செய்து கொள்ளவும். அதன் பின்பு ஆரஞ்சு தோலுடன் ஆரஞ்சு பழத்தின் சாறு பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதில் ஒரு பங்கு தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

இவை மூன்றையும் நன்றாக கலந்து இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த கலவையை வெளியில் காய வைத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக இந்த எண்ணையை எடுத்து நமது தலையில் எண்ணெய் போல பயன்படுத்தலாம். இது உங்கள் முடியை நல்ல பளபளப்பாக வைத்திருக்க உதவுவதுடன்,  வேர்ப்பகுதிக்கு ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.

ஆரஞ்சு ஹேர் பேக்

ஆரஞ்சு பழத்தை வைத்து முடிக்கு ஹேர் பேக் செய்து உபயோகிப்பதால் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. ஆரஞ்சுப் பழத் தோலை நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் முட்டை மற்றும் ஆப்பிள் அல்லது அவகேடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு இதை முடியில் தடவி 15 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து தலைமுடியை கழுவினால் மென்மையான பளபளப்பான முடி கிடைக்கும்.

ஆரஞ்சு முடி கண்டிஷனர்

ஆரஞ்சு பழத்தில் இருந்து சாறு எடுத்து, அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் இவை இரண்டையும் நன்கு கலந்து தலைக்கு குளிக்கும் பொழுது, ஷாம்பு வைப்பதற்கு முன் இதனை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முடி பளபளப்பாக இருக்கும்.

Recent Posts

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

52 minutes ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

54 minutes ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

2 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

3 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

3 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

3 hours ago