கார்த்திக்காக காத்திருந்த இயக்குனர்! மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் ‘ஹீரோ’ இயக்குனர்!?

- இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் நடிக்க உள்ளாராம்.
- கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அடுத்ததாக கார்த்தியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தில் கார்த்திக்கு இரண்டு கதாபாத்திரங்கள் என கூறப்பட்டது.
ஆனால், தற்போது கார்த்தி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக ஆண்டுக்கணக்கில் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ஆதலால் ஹீரோ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் கொஞ்சம் லேட்டாகும் என்பதால்,
பி.எஸ்.மித்ரன் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளாராம். ஒருவேளை அப்படம் ஹீரோ படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறு கதையா என பொறுத்திருந்து அறிவிப்பு வெளியாகும் போது பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025
“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!
June 15, 2025