இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது.
மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், பருத்தி விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
பருத்தியின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. இதற்கு முன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய மருந்துகள் மற்றும் மூலப் பொருட்கள் மீதான இறக்குமதிக்கு விதித்த தடையை பாகிஸ்தான் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜெர்மனியும், பிரான்ஸும் மோதிக்கொண்டாலும் வர்த்தக ரீதியாக நல்ல உறவில் உள்ளது. அதுபோல இந்தியாவும், பாகிஸ்தான் திகழும் என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…