அமெரிக்காவை சேர்ந்தவர் ஆண்ட்ரூ .இவரது மனைவி ஜோயன். இவர்களின் 5 வயது மகன் ஏஜே. கடந்த ஏப்ரல் மாதம் ஏஜே வீட்டில் உள்ள படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது உடையுடன் சேர்ந்து சிறுநீர் கழித்துள்ளார்.
இதை பார்த்த தாய் ஜோயன் கோபத்தில் அடித்து கொண்டு இருந்தார்.பின்னர் அங்கு வந்த தந்தை ஆண்ட்ரூ சேர்ந்து அடித்துள்ளார். இவர்கள் இருவரும் அடித்ததில் ஒரு கட்டத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிரிழந்தார்.
இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத போது இருவரும் சிறுவனின் உடலை புதைத்து உள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தாய் ஜோயன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவருக்கு 20 ஆண்டு முதல் 60 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் ஜோயன் தண்டனை அறிவிக்கப்படும் அதே நேரத்தில் ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…