மக்கள் விரும்பும் நடிகர் மக்கள் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என நடிகர் விவேக் 800 படம் தொடர்பான தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 800 எனும் தலைப்பில் தமிழில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார். இதற்கான போஸ்டர் அண்மையில் வெளியாகிய மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு நடிகர்கள் மத்தியில் எதிர்ப்பை கண்டுள்ளது. ஏனென்றால் முத்தையா முரளிதரன் தமிழ் இனப்படுகொலைக்கு ஆதரவு தந்தவர் எனவும், அவர் இனவழிப்பு செய்யப்பட்ட நாள் என் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான நாள் என கூறியதாலும் பலருக்கும் அவர் மீது ஒரு வெறுப்பு உள்ளது.
எனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் என பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விவேக் தற்பொழுது இந்த படம் குறித்து கருது கூறியுள்ளார். அதில், 800 திரைப்பட விவகாரத்தில் மக்களால் விரும்பப்பட கூடிய நடிகர் மக்களின் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…