சீனாவில் வனப்பகுதிக்கு அருகில் இருந்த ஹூனிங் நகருக்குள் திடீரென்று 15 காட்டுயானைகள் நுழைந்து அங்கு மக்கள் இருக்கும் பகுதிக்குள் சாதாரணமாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த காட்டுயானை கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் பாதை மாறி 480 கி.மீ நடந்து வந்துள்ளது. இதனால் தற்போது ஹூனிக் என்ற மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அந்த காட்டுயானைகளை காட்டிற்குள் திருப்பும் முயற்ச்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
அதனால் மக்கள் இருக்கும் பகுதிக்குள் நுழையாத வண்ணம் போகும் பாதையில் வாகனங்களை நிறுத்தி வருகிறது. மேலும், அந்த யானைகளுக்கு அன்னாசி போன்ற பழங்களை உண்பதற்காக வழங்கி வருகிறது. இருந்தபோதிலும், யானைக்கூடங்கள் அங்கு அருகில் இருக்கும் கடைகளில் பழங்களை உண்பதும் அங்கு இருக்கும் இடங்களில் உல்லாசமாய் சுற்றித்திரிவதுமாக இருந்து வந்தது. இந்த யானைகளில் ஒன்று தற்போது அதன் குட்டியையும் ஈன்றுள்ளது.
அவ்வப்போது இதன் புகைப்படங்கள் வெளிவந்த நிலையில், தற்போது இந்த 16 யானைகளும் நகருக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உறங்கும் காட்சி வைரலாகி வருகிறது. இதில் இந்த யானைக்கூடங்கள் அனைத்தும் ஒன்றாக உறங்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அரசு ட்ரான் கேமரா மூலம் எடுத்துள்ளது. 480 கி.மீ வழிமாறி வந்த களைப்பால் இவை அனைத்தும் ஓய்வெடுக்கும் காட்சியை பலரும் ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…