தனியுரிமை அச்சுறுத்தல்கள்:ஃபேஸ்புக்கில் முக்கிய அம்சத்தை நீக்க நிறுவனம் முடிவு!

Published by
Edison

தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமீபகாலமாக ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது,அதன்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வர் சில மணி நேரம் செயலிழந்த காரணத்தால் அதன் பல பயனர்களை நிறுவனம் இழந்தது.அதே சமயம், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய பிற செயலிகளையும் வழிநடத்தி வந்த நிலையில்,இந்த தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியுள்ளது. எனினும் தனது சமூக ஊடக செயலியின் பெயரை ஃபேஸ்புக் என்றே தொடர்கிறது.

இந்த நிலையில்,ஃபேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் முக அங்கீகார( face recognition) அம்சத்தை நீக்குவதற்கான திட்டங்களை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தனியுரிமைச் சிக்கல்கள் காரணமாக ஃபேஸ்புக்கில் இருந்து முக அங்கீகார அம்சத்தை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.நிறுவனத்துக்கு எதிர்மறையான பொதுக் கருத்து மற்றும் மெட்டாவேர்ஸில் கவனம் செலுத்துவதற்கான நிறுவனத்தின் திட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இது தொடர்பாக,மெட்டாவின் துணைத் தலைவர் ஜெரோம் பெசென்டி கூறுகையில்: “இந்த மாற்றம் தொழில்நுட்ப வரலாற்றில் முக அங்கீகார பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்.

எனினும்,முகத்தை அடையாளம் காணும் அல்காரிதம்கள் உடனடியாக நிறுத்தப்படாது. இது அடுத்த சில வாரங்களில் நிறுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் டிஜிட்டல் புகைப்படங்களின் உலகில் மிகப்பெரிய அம்சத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது,அதன்படி,முக அங்கீகார அம்சத்தில் யார் யார் என்பதற்கான துல்லியமான தரவை ஃபேஸ்புக் வழங்குகின்றன.

இந்த அம்சம் முதன்முதலில் டிசம்பர் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது ஃபேஸ்புக்கில்  பதிவேற்றப்படும் புகைப்படங்களில் உள்ளவர்களுக்கு தானாகவே குறிச்சொற்களை(tag) பரிந்துரைக்கிறது. ஃபேஸ்புக்கின் இந்த ஆட்டோமெட்டிக் முக அங்கீகார வசதியால் தங்களது தனியுரிமை பாதிக்கப்படுவதாக பலரும் கூறிவந்தனர்.இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் இருந்து கோடிக் கணக்கான முகரேகைகளையும் அழிக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Recent Posts

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

36 minutes ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

54 minutes ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

2 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

4 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

5 hours ago