தனியுரிமை அச்சுறுத்தல்கள்:ஃபேஸ்புக்கில் முக்கிய அம்சத்தை நீக்க நிறுவனம் முடிவு!

Published by
Edison

தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமீபகாலமாக ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது,அதன்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வர் சில மணி நேரம் செயலிழந்த காரணத்தால் அதன் பல பயனர்களை நிறுவனம் இழந்தது.அதே சமயம், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய பிற செயலிகளையும் வழிநடத்தி வந்த நிலையில்,இந்த தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியுள்ளது. எனினும் தனது சமூக ஊடக செயலியின் பெயரை ஃபேஸ்புக் என்றே தொடர்கிறது.

இந்த நிலையில்,ஃபேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் முக அங்கீகார( face recognition) அம்சத்தை நீக்குவதற்கான திட்டங்களை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தனியுரிமைச் சிக்கல்கள் காரணமாக ஃபேஸ்புக்கில் இருந்து முக அங்கீகார அம்சத்தை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.நிறுவனத்துக்கு எதிர்மறையான பொதுக் கருத்து மற்றும் மெட்டாவேர்ஸில் கவனம் செலுத்துவதற்கான நிறுவனத்தின் திட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இது தொடர்பாக,மெட்டாவின் துணைத் தலைவர் ஜெரோம் பெசென்டி கூறுகையில்: “இந்த மாற்றம் தொழில்நுட்ப வரலாற்றில் முக அங்கீகார பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்.

எனினும்,முகத்தை அடையாளம் காணும் அல்காரிதம்கள் உடனடியாக நிறுத்தப்படாது. இது அடுத்த சில வாரங்களில் நிறுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் டிஜிட்டல் புகைப்படங்களின் உலகில் மிகப்பெரிய அம்சத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது,அதன்படி,முக அங்கீகார அம்சத்தில் யார் யார் என்பதற்கான துல்லியமான தரவை ஃபேஸ்புக் வழங்குகின்றன.

இந்த அம்சம் முதன்முதலில் டிசம்பர் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது ஃபேஸ்புக்கில்  பதிவேற்றப்படும் புகைப்படங்களில் உள்ளவர்களுக்கு தானாகவே குறிச்சொற்களை(tag) பரிந்துரைக்கிறது. ஃபேஸ்புக்கின் இந்த ஆட்டோமெட்டிக் முக அங்கீகார வசதியால் தங்களது தனியுரிமை பாதிக்கப்படுவதாக பலரும் கூறிவந்தனர்.இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் இருந்து கோடிக் கணக்கான முகரேகைகளையும் அழிக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Recent Posts

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

2 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

2 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

3 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

4 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

5 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

5 hours ago