இந்தியா – சீனா எல்லைகள் நிலவரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்- ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவானே இருவரும் இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய எல்லைப்பகுதியான லடாக்கின் சர்ச்சைக்குரியதாக சீனாவால் அத்துமீறி ஆக்கிரமிப்பு சம்பவத்தால் கடுமையான பதற்றம் நிலவி வந்தது.இந்நிலையில் முப்படை தளபதிகளும் தங்களது படைகளை சந்தித்த வண்ணம் இருந்தனர்.அதன் ஒரு நிகழ்வாக கடந்த வாரத்தில் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை ராணுவ படைத்தளபதி முகுந்த் நரவானே சந்தித்து பேசினார். சந்திப்பில் எல்லையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
ராணுவ படைத்தளபதியைப் போலவே, விமான படை தலைமை தளபதி, ஆர்.கே.எஸ்.பதவுரியாவும் காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்த ஆய்வினை 2 நாட்களாக ரகசியமாக செய்தாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், நேற்று ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங்கை,இந்திய ராணுவ படைத்தளபதி முகுந்த் நரவானே சந்தித்துப் பேசிதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த சந்திப்பில் எல்லையில் ராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர், விவரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
(வியாழன்)நேற்று முன்தினம் பதற்றமாக காணப்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் ஆனது 1 கிலோ மீட்டர் துாரம் பின்வாங்கிய நிலையில் இருவர்களுடைய இந்த சந்திப்பு, அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…