“கொரோனாவுக்கான மருந்தை தயாரிக்க சீனாவுடன் இணைய தயாரா?” செய்தியாளரின் கேள்விக்கு டிரம்ப் அதிரடி பதில்!

Published by
Surya

வெற்றிகரமாக கொரோனா தடுப்பு மருந்தை தயார் செய்ய சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயார் என செய்தியாளரின் கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகிறது.மேலும் கொரோனா பரவலை தடுக்க, பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து வருகிறது.

அந்தவகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர், “கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க சீனாவுடன் இணைய தயாரா” என கேள்வி எழுப்பினார். அதற்கு டிரம்ப், வெற்றிகரமாக கொரோனா தடுப்பு மருந்தை தயார் செய்ய சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை வளர்ச்சியில் அமெரிக்கா சிறப்பாக செயல்படுகிறது எனவும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு அமெரிக்கா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் அமெரிக்க ராணுவம் அதனை விநியோகம் செய்யும் என அந்த பேட்டியில் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு நோய்க்கு எதிராக, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தின் சோதனை முடிவில் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரிவித்துள்ளனர்.

Published by
Surya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago