விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.தளபதி மற்றும் மக்கள் செல்வனின் காம்போவை பார்க்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது மாஸ்டர் படத்தினை குறித்து கூறியுள்ளார். மாஸ்டர் படம் விஜய்யின் மற்ற படங்களை விட மாறுபட்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதா என்ற கேள்விக்கு மாஸ்டர் ஒரு பெரிய பட்ஜெட் படம் மட்டுமில்லாமல், தளபதி ரசிகர்கள் அவரது படத்தை திரையில் பார்த்து ரசிக்க வேண்டுமென்றே பலரும் விரும்புகின்றனர். எனவே மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை பொங்கல் அல்லது தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் பெரிதும் குஷியில் உள்ளனர்.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…