‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை கட்டுப்படுத்திய ரஷ்யா!

Published by
பாலா கலியமூர்த்தி

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, ‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது.

இணையதளங்களை முடக்கும் ரஷ்யா:

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதில் இருந்து, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள தகவல்களின் மீதான தனது கட்டுப்பாட்டை கணிசமாக ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கூகுள் நியூஸ் சேவைக்கு கட்டுப்பாடு:

இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் பற்றிய “தவறான” தகவல்களை வழங்குவதாக குற்றம் சாட்டி, கூகுள் நியூஸ் சேவையை ரஷ்யாவின் ஊடக கட்டுப்பாட்டாளர் கட்டுப்படுத்தியுள்ளார் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. ரஷ்ய பொது வழக்கறிஞர் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்நாட்டின் ஊடக கட்டுப்பாட்டாளர் ரோஸ்கோம் நாட்ஸர் அறிக்கையின்படி மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆன்லைன் செய்தி சேவை:

ஆன்லைன் செய்தி சேவையானது “உக்ரைனில் இராணுவ நடவடிக்கையின் போக்கைப் பற்றிய தவறான தகவல்களைக் கொண்ட ஏராளமான வெளியீடுகள் மற்றும் பொருட்களை அணுகுவதற்கு அணுகலை வழங்கியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இணையதளத்தை அணுகுவதில் சிக்கல்:

அதன்படி, ரஷ்யாவில் கூகுள் நியூஸ் செயலி மற்றும் இணையதளத்தை அணுகுவதில் சிலருக்கு சிரமம் இருப்பதாக கூகுள் உறுதி செய்துள்ளது. மேலும் இது எங்களின் தரப்பில் எந்த தொழில்நுட்ப சிக்கல்களும் ஏற்படவில்லை என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ரஷ்யாவில் உள்ள மக்களுக்கு செய்திகள் போன்ற தகவல் சேவைகளை முடிந்தவரை அணுகுவதற்கு நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம் என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

மாஸ்கோ நீதிமன்றம்:

பிபிசி உட்பட பல ரஷ்ய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தங்கள் ஆன்லைன் சேவைகளை கட்டுப்படுத்தியுள்ளன. அமெரிக்க சமூக வலைத்தளங்களான Facebook மற்றும் Instagram ஆகியவை மாஸ்கோ நீதிமன்றத்தால் “extremist” என அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் அமெரிக்க நிறுவனமான கூகுள் மற்றும் அதன் வீடியோ சேவையான யூடியூப் மீது “பயங்கரவாத” நடவடிக்கைகள் இருப்பதாக ரோஸ்கோம்நாட்ஸர் குற்றம் சாட்டினார்.

கிரிமினல் குற்றங்கள் அறிமுகம்:

அதே நேரத்தில், ரஷ்ய அதிகாரிகள் மார்ச் மாத தொடக்கத்தில் இரண்டு புதிய கிரிமினல் குற்றங்களை அறிமுகப்படுத்தினர். ஒன்று ரஷ்ய இராணுவத்தை “இழிவுபடுத்தும்” தகவல்களை பரப்புவதற்கும் மற்றொன்று ரஷ்ய துருப்புக்கள் பற்றிய “தவறான” தகவல்களை பரப்புவதாகும். இந்த குற்றத்திற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

1 hour ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

2 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

2 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

4 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

4 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

4 hours ago