கால் சென்டர் டாஸ்க்கில் யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் முதலிடம் வேண்டுமென்று சனம் வாக்குவாதம் செய்ய ,13-வது இடத்திற்கு சனமை போக சொல்லி பாலாஜி கூறுகிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு விளக்கியும் இருந்தனர் .
நேற்றுடன் முடிவடைந்த இந்த டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து வந்தனர் . இந்நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் முதல் இடத்திற்காக ஆரி, பாலாஜி, அர்ச்சனா மற்றும் சனம் ஆகியோர் வாக்குவாதம் செய்கின்றனர்.அப்போது அர்ச்சனா தரமான கேள்விகளுடன் பஸர் அடிக்கும் வரை தான் கேள்வி கேட்டதாக கூறி தனக்கு முதல் இடம் வேண்டும் என்று வாக்குவாதம் செய்கிறார்.அதே போல் சனமும் எனக்குத்தான் முதலிடம் என்று கூறுகிறார்.அப்போது பாலாஜி சனமை 13-வது இடத்திற்கு போக சொல்ல சனம் முடியாது என்கிறார்.
தற்போது வெளியான இரண்டாவது புரோமோவின் படி ,முதலிடத்தில் சனம், இரண்டாவது இடத்தில் அனிதாவும், மூன்றாவது இடத்தில் பாலாஜியும், நான்காவது இடத்தில் ரம்யாவும், ஐந்தாவது இடத்தில் ரியோ, ஆறாவது இடத்தில் ஆஜித் ஆகியோர் உள்ளனர். அதே போல் கடைசி மூன்று இடத்தில் கேபி, ஷிவானி மற்றும் நிஷா ஆகியோர் உள்ளனர் .வாக்குவாத அடிப்படையில் இந்த வரிசை மாறலாம் . யார் யார் எந்த இடத்தில் உள்ளார்கள் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும் .
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…