ஹீரோவாக களமிறங்கிய ‘நாதஸ்’.! வைரலாகும் செந்திலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததுள்ளது.
தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் செந்தில் பேசிய காமெடி கவுண்டர்களும், நடித்த நகைச்சுவைக் காட்சிகளும் இப்போதைய காலகட்டத்தில் மீம்ஸ் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது. செந்தில் -கவுண்டமணி இருவரும் இணைந்து செய்யும் காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. கடைசியாக செந்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் செந்தில் ஹீரோவாக “ஒரு கிடாயின் கருணை மனு” படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளர் சமீரா பரத் ராம் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறு விறுப்பாக நடந்தது வந்தது, அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்நிலையில் கதாநாயகனாக நடித்துள்ள செந்தில், தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. செந்திலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025