தண்ணீர், உணவு என மனிதனின் அணைத்து அன்றாட தேவைகளுமே தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது நாம் அறிந்தது. ஆனால், பேச்சுவாக்கில் பாருங்கள் காற்றையும் ஒரு நாள் விலை குடுத்து வாங்கணும் என நக்கலாக சொல்லியிருப்போம். அது தற்போது உண்மையிலேயே சாத்தியமாகிவிட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஊரில் தெரியுமா?
வேறெங்கும் இல்லை. நம்ம தலைநகராகிய டெல்லியில் தான். அதாவது, மற்ற இடங்களை விட நம் இந்தியாவின் தலை நகராகிய டெல்லியில் காற்றின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு ஒரு பொருளை பார்ப்பதற்கே காத்திருக்க வேண்டும் போல, அப்படி பட்ட காற்று மாசுபாடு.
இப்படிப்பட்ட காற்று மாசுபாட்டால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் நிலை மோசமடையவும், உடல் நிலை சரியில்லாதவர்கள் இறக்கவும் கூடிய நிலை காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஆக்சிஜன் பார் ஒன்றை ஒருவர் அமைத்துள்ளார்.
அங்கு ஒரு நாளுக்கு 15 பேருக்கு மேல் வருவார்களாம். 1 மணி நேரத்திற்கு 299 ருபாய் தற்போது வரை வசூலிக்கப்படுகிறது. போக போக இன்னும் அதிகரிக்கும் என கூறுகிறார் உரிமையாளர். அந்த காற்றிலும் லெமன்கிராஸ், ஆரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூக்லிப்பிட்டஸ், லாவண்டர் ஆகிய 7 நறுமணங்களை கலந்து தேவையானதை கொடுப்பார்களாம். மனிதர்களாகிய நமது செயல் பாட்டால் இறைவன் நமக்கு கொடையாக கொடுத்த காற்றை கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…