இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் வடிவாசலுக்கு தயாராகும் சூர்யா.!

சூர்யாவின் அலுவலகத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை 23- ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சூர்யாவின் அலுவலகத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் சூர்யா காளையுடன் பயணித்து வருகிறார். இரண்டு காளைகளில் எந்த காளை சரியாக உள்ளதோ அந்த காளை படத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025