இந்த விதிமுறைகளை பின்பற்றித்தான் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதாம்.?!

Published by
மணிகண்டன்

40 சதவீத இருக்கை, ஆன்லைன் டிக்கெட் போன்ற பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், சினிமா சூட்டிங் செல்வதற்கும் மார்ச் மாதம் முதல் தற்போது வரை கிடைக்கப் பெறாமல் உள்ளது.

இதுதொடர்பாக திரைத்துறையினர் தொடர்ந்து தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செப்டம்பர் மாதம் தியேட்டர்களை திறப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.

திரையரங்கு உரிமையாளர்கள், செப்டம்பர் மாதம் எப்படியும் தியேட்டர்களை திறந்து விட அரசு கூறிவிடும் என்ற நம்பிக்கையில் தற்போது செயல்பட்டு வருகின்றனர். அப்படி திரையரங்குகள் திறக்கப்பட்டால், அதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகள் இவைதான்என தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஒரு திரையரங்கில் 40 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் எனவும், டிக்கெட்டுகள் கவுண்டர்களில் அல்லாமல் ஆன்லைன் புக்கிங் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், உடல் வெப்பநிலை சரிபார்த்த பின்னரே வரிசையாக தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும்,

ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் எனவும், ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும் ஒன்றரை மணி நேரம் இடைவெளி விடப்படும் எனவும், அந்த இடைவெளி நேரத்தில் கிருமிநாசினி கொண்டு இருக்கைகளை சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. மேற்கண்ட விதிமுறைகளை உள்ளடக்கிய விதிமுறைகளை பின்பற்றித்தான் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு திரையரங்கங்கள் திறக்கப்படும் என தற்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

இதனால் சினிமா பிரியர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago