டாட்டா மோட்டார்ஸ் பயணிகள் வாகனத்தின் விலையானது நாளை முதல் 0.8% க்கும் மேலாக அதிகரிக்கும் என்று டாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ்,எஃகு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கொள்முதல் விலையில் ஏற்பட்ட உயர்வை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்டு,அதன் பயணிகள் வாகனங்களின் விலையை அதிகரிக்க விரும்புவதாக, நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்நிலையில்,டாடா மோட்டார்ஸ் நாளை (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) முதல் அதன் பயணிகள் வாகனங்களின் விலைகளை ஒவ்வொரு மாடல்களை பொறுத்து சராசரியாக 0.8% க்கும் மேலாக அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர் மற்றும் சப்ளையர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும்,சேவை செய்வதற்கும் ஒரு விரிவான ‘வணிக சுறுசுறுப்பு திட்டத்தை (Business Agility Plan) இயக்குவதாக அறிவித்தது.
விற்பனை அதிகரிப்பு:
டாட்டா நிறுவனம் அதன் மொத்த உள்நாட்டு விற்பனை 92% முதல் 51,981 யூனிட்கள் அதிகரித்துள்ளதாக நேற்று அறிவித்தது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 27,024 யூனிட்களை மட்டுமே விற்றது.
அதேபோல,உள்நாட்டு சந்தையில் அதன் பயணிகள் வாகனம் (passenger vehicle) விற்பனை ஜூலை மாதத்தில் 30,185 யூனிட்களாக அதிகரித்துள்ளது,கடந்த ஆண்டு இதே மாதத்தில் 15,012 யூனிட்கள் மட்டுமே விற்பனை ஆனது.
மேலும்,உள்நாட்டு சந்தையில் வர்த்தக வாகன (commercial vehicle ) விற்பனை கடந்த ஜூலை 2020 ல் 12,012 யூனிட்டுகளில் இருந்து 21,796 யூனிட்களாக 81% வரை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…