அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Default Image

அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிந்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் தீவிர ரசிகர் எனக்கூறி தெலுங்கானாவை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணன் என்பவர் அவரை கடவுளாக சிலை வைத்து தினமும் பூஜித்து வந்தார். இவரது செயல் மிகவும் உலகெங்கிலும் வைரலாகி வந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபரும் அவரது மனைவிக்கும் கொரோனா என்ற செய்தி அறிந்ததிலிருந்து புஸ்ஸா கிருஷ்ணா அவர்கள் மிகவும் சோர்வடைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதையும் அவர் தவிர்த்துள்ளார். இன்று காலை திடீரென மயங்கி விழுந்து, உயிர் இழந்துள்ளார். இது குறித்து அவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், வழக்கம் போல காலையில் எழுந்தார், எந்த வேறுபாடும் எங்களுக்கு தெரியவில்லை. டீ குடித்த பின் சிறிது நேரத்தில் மயங்கி தரையில் விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார் என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir