அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி க்கு தற்காலிக தடை

Default Image

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஆறு பேருக்கு “அரிய மற்றும் கடுமையான வகை இரத்த உறைவு” ஏற்பட்டுள்ளது.இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை இடைநிறுத்த அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

“இன்று எஃப்.டி.ஏ மற்றும் @ சி.டி.கோவ் ஆகியவை ஜான்சன் அண்ட் ஜான்சன் # கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.அமெரிக்காவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஜே & ஜே வின் ஒற்றை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 6 பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.இந்த ஆறு பேரும் 18 லிருந்து 48 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவர்.

தடுப்பூசி போட்ட 6 முதல் 13 நாட்களுக்குப் பிறகு தான் இந்த இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது.இந்த கட்டிகள் மூளையில் இருந்து இரத்தத்தை வெளியேற்றும் நரம்புகளில் நிகழ்ந்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்து  பகுப்பாய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும். “அந்த செயல்முறை முடிவடையும் வரை, நாங்கள் இந்த இடைநிறுத்தத்தை பரிந்துரைக்கிறோம் என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

NASA - Netflix
eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai