பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நான்கு தீவிரவாதிகள் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தைத் நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
நான்கு பயங்கரவாதிகளில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் கட்டிடத்திற்குள் உள்ளதாகவும், கட்டிடத்தின் பிரதான வாயிலில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கட்டிடத்தைத் தாக்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு காவலர் ஆகியோர் அடங்குவர். அலுவலகத்தின் சுற்றியுள்ள பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…