டிசையர் தனது குட்டி தம்பியை காப்பாற்ற இறுதிவரை போராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பாசமும், தைரியமும் அப்பகுதி மக்கள் மத்தியில் அவரை ஹீரோவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஆங்கி ரீட் என்பவருக்கு டிசையர் என்ற 11 வயது மகளும், 6 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் கியான் என்ற குழந்தையும்உள்ளனர். இந்நிலையில், அவரின் வீட்டில் திடீரென தீப்பற்றி உள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், ஆறு வயது மகன் தனது தாயிடம் புகைமூட்டமாக இருப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக அலறியடித்துக்கொண்டு ஆறு வயது மகனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு அவர் வெளியேறினார் ஆங்கி ரீட். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம், தனது 11 வயது மகள் டிசையர் மற்றும் 8 மாத கைக்குழந்தையை மீட்கும்படி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ஆங்கி ரீட் தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு பக்கத்து அறையில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் மீட்க சென்றுள்ளார். ஆனால் அந்த அறை உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்ததால் அவரால் குழந்தைகளை மீட்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது 8 கைகுழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், குழந்தையும் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது. பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், இந்த 2 குழந்தைகளையும் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது.
ஆனால், டிசையர் தனது குட்டி தம்பியை காப்பாற்ற இறுதிவரை போராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பாசமும் தைரியம் அப்பகுதி மக்களுக்கு அவரை ஹீரோவாக்கி உள்ள நிலையில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வைத்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…