‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தினை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் செந்தில் .இவரும் , நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த படங்கள் யாவும் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.இவர்களின் காம்போக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு . நடிகர் செந்தில் கடைசியாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எனும் படத்தில் நடித்திருந்தார்.
இதுவரை எந்த படத்திலும் ஹீரோவாக நடிக்காத செந்தில் தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளார் .நடிகர் செந்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தினை சுரேஷ் சங்கையா இயக்குகிறார்.இவர் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு ஆயுள் தண்டனை குற்றவாளியாக செந்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்தினை சமீர் பாரத் ராம் தயாரிக்க ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…