வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் – அமெரிக்கா அறிவிப்பு..!

Published by
Edison

வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க கணினி மோசடி மற்றும் சட்டத்தை மீறும் ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.ஏனெனில்,அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து ரான்சொம்வேர் (ransomware) தாக்குதல்களில் ஹேக்கர்கள் ஈடுபடுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெகுமதி சலுகையைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://rewardsforjustice.net/english/ என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ஏறக்குறைய 40 ஆண்டுகளாக  உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதன் வெகுமதிகளுக்கான நீதித் திட்டத்தின் மூலம் செலுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ரான்சம்வேர் குழுக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பைப்லைன்கள், உற்பத்தியாளர்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் உள்ளூர் அரசாங்க கணினிகளை ஹேக் செய்து மில்லியன் கணக்கில் பணம் ஈட்டியுள்ளனர்.இதனால்,கடந்த 2020 ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்களுக்கு சுமார் 350 மில்லியன் டாலர் மீட்கும் தொகை வழங்கப்பட்டதாக டி.எச்.எஸ் மதிப்பிட்டுள்ளது.

மேலும்,ரான்சொம்வேர் வைரஸை தவிர,அரசாங்க கணினிகள் ,மாநிலங்களுக்கிடையேயான அல்லது வெளிநாட்டு வர்த்தகம் அல்லது தகவல்தொடர்புகளில் பல இணைய மீறல்கள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில்,இந்த தாக்குதல்களை நடத்தும் சைபர் குற்றவாளிகள் ரஷ்யாவிற்கு வெளியே செயல்படுவதால், யு.எஸ். ஜனாதிபதி ஜோ பைடென் தனது ரஷ்ய பிரதிநிதி விளாடிமிர் புடினுடன், சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நடப்பு மாத தொடக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
Edison

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

11 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago