கிட்டத்தட்ட 6 படங்களிலிருந்து என்னை விலக்கினார்கள்.! ஆதங்கத்தை கூறிய பிரபல நடிகை.!

Published by
Ragi

தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களால் தன்னை 6 படங்களிலிருந்து விலக்கினார்கள் என்று தடம் பட நடிகையான வித்யா பிரதீப் கூறியுள்ளார்.

மீரா கதிரவன் இயக்கிய அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். தியானா என்ற பெயரில் பல படங்களில் நடித்த இவர் அதற்கு பின்னர் வித்யா பிரதீப் என்று தனது பெயரை மாற்றினார். அதனையடுத்து சைவம், பசங்க 2,அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2,தடம் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி உள்ள தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங்கின் மரணத்தை அடுத்து பல பிரபலங்கள் சினிமாவில் தங்களுக்கு நேர்ந்த விஷயங்களை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வித்யா பிரதீப் தனக்கு நேர்ந்த கொடுமை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தன்னை தடம் படத்தில் நடிப்பதற்கு முன்பு தொழிலுக்கு சம்பந்தமில்லாத ஒரு சில காரணங்களால் கிட்டத்தட்ட 6 படங்களில் இருந்து தன்னை விலக்கியதாகவும், அதன் பின்னர் படிப்பில் கவனம் செலுத்தி வந்த என்னை தடம் பட இயக்குநரை சந்திக்க கோரி காஸ்டிங் டைரக்டரான ஸ்ருதி கேட்டதாகவும் கூறினார். அதனையடுத்து தடம் படத்திற்கான ஆடிஷனில் பங்கேற்று தேர்வான என்னை இயக்குநர் மகிழ் திருமேனி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இயலுமா என்று பயந்த போது ஊக்கப்படுத்தியதாகவும், அது ஒரு சிறந்த அனுபவம் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

2 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

2 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

4 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

5 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago