கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி இது தான் – உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி இது தான் என உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் தெரிவித்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இதனை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இதுவரை உலக அளவில், 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் அவர்கள் கூறுகையில், உலக நாடுகள் அனைத்தும், பொது சுகாதாரக் கட்டமைப்பின் அடிப்படையான விதிகளை நடைமுறைப்படுத்துவதில், கவனம் செலுத்துவதுதான் நீண்ட கால சவாலான கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கற்பனை செய்யமுடியாத இழப்புகளைத் தவிர்க்க, மறுபடியும் உலக நாட்டின் அரசுகள், பாதிக்கப்பட்டவர்களை கண்டடைதல், தடம் வழி கண்டறிதல், சோதனைக்கு உட்படுத்துதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ரியான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025