திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் தான் தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா என அறியப்படும் சி.என்.அண்ணாதுரை. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளி படிப்பை சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், அதன்பின் கல்லூரி படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் கற்றுள்ளார்.

கல்லூரி முடித்தவர்கள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் எனும் மனப்பான்மை அதிகம் இருந்த காலகட்டத்தில், ஆங்கிலம் பேசினால் தான் கௌரவம் என நினைத்தவர்களுக்கு எதிர்ப்பாக அண்ணா தமிழில் மட்டுமே பேசியுள்ளார். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்த இவர், அதன் பின் திராவிட கழகத்திலிருந்து விலகி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார்.

அதன்பின் மாநிலங்களவை உறுப்பினராக 1962 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1960 இல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். இந்தியா குடியரசான பிறகு காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி அமைத்த முதல் கட்சி அறிஞர் அண்ணாவின் திராவிட கழக கட்சி தான். அரசியலில் புதிய வரலாறு படைத்த இவர் தான் மதராஸ் மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயரிட்டவர்.

அதன் பின் தனது 59-வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா 1969 ஆம் ஆண்டு மறைந்தார். ஒன்றரை கோடி மக்கள் கலந்து கொண்ட இவரது இறுதிச் சடங்கு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அரசியலில் சாதனை புரிந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

25 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

7 hours ago