வெள்ளை மாளிகைக்குள் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் – அமெரிக்காவில் பதற்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் புகுந்ததால் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் நேற்று அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றபோது திடீரென கட்டிடத்திற்கு வெளியே ட்ரம்பின் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டனர்.

மறுபக்கம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். இவர்களை தடுக்க பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

வன்முறை தூண்டும் வகையில் தான் பேசிய வீடியோவை ட்ரம்ப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், ட்ரம்பின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் 24 மணி நேரத்துக்கு முடக்கம் என்றும் ட்விட்டர் 12 மணி நேரம் முடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

5 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago