பெண்களே…! 5 நாட்களில் கண் கருவளையத்தை போக்கலாம்.!

Default Image
இருண்ட வட்டங்களுக்கான வீட்டு வைத்தியம் கண் கருவளையத்தில்  இருந்து அரைத்த உருளைக்கிழங்கு வரை, இது உங்களுக்கு மிகவும் பலசாக இருக்கும் ஆனால் இது கண் கீழ் கருவளையங்களில் இருந்து விடுபட உதவுகிறது.

கீழே கருவளையங்களை எதிர்த்துப் போராடி மறைக்க உதவும் சில எளிமையான நேச்சுரல் கண் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர, போதுமான தூக்கம் மற்றும் போதுமான நீரையும் குடிக்க வேண்டும் மேலும் இது பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் பொருந்தும்.

வெள்ளரி & உருளைக் கிழங்கு:

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையங்கள் இருக்கும். இதை நீக்குவதற்கு வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தால் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

2 துண்டு வெள்ளரிக்காயில், 1. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து இதனை தினமும் கண்களைச் சுற்றி பூசி கொண்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் கருவளையம் போய்விடும்.

திராட்சை:

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைவதற்கு  திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் நீக்க முடியும்.

சந்தனம் & ஜாதிக்காய்:

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் சற்றும் சோம்பேறித்தனப் படாமல், ஒருசில பொருட்களால் சருமத்திற்கு தினமும் பராமரிக்க வேண்டும்.

கற்றாழை ஜெல்:

கற்றாழை பல்வேறு அழகு நன்மைகளை தருகிறது. அதற்கு கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து கண்களைச் சுற்றி தடவி மசாஜ் செய்ய வேண்டும். வேண்டுமானால் கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து உபயோகிக்கலாம்.

தக்காளி:

தக்காளி ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலைட்டிங் முகவரை உருவாக்குகிறது. அழகு என்று வரும்போது இது ஒரு வெற்றி. எலுமிச்சை சாறு மற்றும் புதிய தக்காளி சாறு கலந்து கண் பகுதியில் தினமும் மசாஜ் செய்துவிட்டு சுமார் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு தேங்காய் தண்ணீரில் கழுவ வேண்டும்.

அரைத்த உருளைக்கிழங்கு:

முழு உருளைக்கிழங்ககை அரைத்த அல்லது குளிர்ந்த மூல உருளைக்கிழங்கு துண்டுகள் கூட சருமத்தில் மின்னல் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உருளைக்கிழங்கு மற்றும் புதினாவை அரைத்து அந்த சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து கண்களை மூடி கண்களின் மீது 10 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.இதை நீங்களே முயற்சி செய்து பாருங்கள், இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பாருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies