துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2,250க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனை அடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஸ்டமோனு பகுதியில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…