மாஸ் காட்டிய TVS: இனி ஷோரூம்க்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அட ஆமாங்க!

Published by
Surya

நாம் ஷோரூம் செல்லும் நேரத்தை குறைக்கும் விதமாக டி.வி.எஸ்.நிறுவனம், தனது A.R.I.V.E செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நான் ஷோரூமில் இருக்கும் அனுபவத்தை தரும்.

சென்னையை தலைமை இடமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகனம் வாங்குவதை எளிமையாகவும் ஒரு அறிமுகப்படுத்தியது. அது, Augmented Reality Interactive Vehicle Experience (A.R.I.V.E). இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஷோரூமிற்கு வந்து வாகனத்தை பார்ப்பதற்கு பதில், தங்களின் வீட்டில் இருந்தே தங்களுக்கு தேவையான பைக்குகளை பார்த்துக்கொள்ளலாம். இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஷோரூமில் இருப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும்.

இந்த செயலியில் டிவிஎஸ் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் இருக்கும். அந்த வாகனத்தை கிளிக் செய்தால், அந்த வாகனம் பற்றிய அனைத்து தகவல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். இதனால் அந்த வாகனத்தை பற்றி பரப்பப்படும் போலி தகவல்களை தவிர்க்கலாம். மேலும், ஒரு வாகனத்தை நேரில் சுற்றிப்பார்த்தால் எப்படி இருக்குமோ, அதேபோன்று 360 டிகிரியில் பார்வையிடும் வசதியும் இந்த செயலியில் இருக்கின்றது.

அதுமட்டுமின்றி, டெஸ்ட் டிரைவினை புக் செய்யும் வசதியும் இந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது.வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கவேண்டுமானால், கண்டிப்பாக ஷோரூம்-க்கு செல்லவேண்டும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக டீலர்கள் பலர், டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வசதியை எளிமையாக்க, வீடு தேடி வந்து வாகனத்தை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago