மீண்டும் ஹீரோவாக ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறாரா வைகைப் புயல்.!

Published by
Ragi

வடிவேலு அவர்கள் எலி என்ற திரைப்படத்தை அடுத்து சுராஜ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வடிவேலு அவர்கள் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனையடுத்து கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், எலி, தெனாலிராமன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரசிகர்களை சிரிக்க வைக்க ரெடியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் கடைசியாக கத்தி சண்டை என்ற படத்தின் மூலம் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை, விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago