தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி பிரம்மாண்ட போர் காட்சிகளை பிரம்மாண்ட செட் அமைத்து மிரளவைக்கும் அளவிற்கு படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் படக்குழு வெளியிட உள்ளது. அதனால் ஒவ்வொரு மொழிகளில் இருந்தும் முக்கிய நடிகர்களை களமிறக்கியுள்ளனர். ஹிந்தியிலிருந்து அமிதாப்பச்சன் நடித்துள்ளார். கன்னடத்திலிருந்து சுதீப் நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த நயன்தாரா நடித்துள்ளார். அதேபோல தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழனாகவே நடித்துள்ளார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ராஜபாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவிக்கு விடுதலைப் போராட்டத்தில் உதவி புரியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…