மறைந்த மனைவியை கணவன் கண் முன் கொண்டுவந்து மகிழ்வித்த விர்சுவல் ரியாலிட்டி!

Published by
Rebekal

தென்கொரியாவை சேர்ந்த குழு உயிரிழந்த பெண்மணி ஒருவரை மீண்டும் விர்சுவல் ரியாலிட்டி மூலமாக கற்பனை உலகில் கொண்டுவந்து அவரது கணவரை நடனமாடி மகிழ்விக்க செய்துள்ளது.

முன்பு காலத்தில் எல்லாம் உயிரிழந்தவர்களின் நினைவுகளுடன் வாடிய குடும்பங்கள், அவர்களின் புகைப்படங்கள் ஏதாவது ஒன்றோ இரண்டோ கிடைத்தால் அதை பார்த்து ஏங்குபவர்களையும் தான் நாம் கண்டு வருத்தப்பட்டு இருப்போம். ஆனால் தற்பொழுது ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரது நினைவாக அவரது பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதள புகைப்படங்கள் என அனைத்தும் கையிலேயே வைத்துக் கொண்டு அவர்கள் உயிருடன் இருப்பது போன்ற பிம்பத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இதற்கும் ஒரு படி மேலே சென்று தென்கொரியாவில் கடந்த வருடம் இறந்து சில மாதங்கள் ஆன குழந்தையை நீண்ட நாட்களுக்குப் பின்பு அவரது தாய்க்கு நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சியை விர்சுவல் ரியாலிட்டி மூலம் தென் கொரியாவை சேர்ந்த குழு ஒன்று கொடுத்தது.

நெகிழ்ச்சி அடைந்த தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கண்கலங்க வைத்தது. அதேபோல தற்பொழுதும் தென்கொரியாவில் இறந்துபோன மனைவியுடன் கணவர் நடனம் ஆடக் கூடிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு காரணமும் அதே விர்சுவல் ரியாலிட்டி தான். மீட்டிங் யு எனும் பெயரில் மகளிடம் தாய் உரையாடியது போல தற்போது உயிரிழந்த தென்கொரியாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் நடை உடை பாவனைகள் அனைத்தையும் கணினியில் பதிவேற்றி, ஆறுமாத கடின உழைப்பிற்குப் பின் நிஜ உலகின் அதிசய படைப்பாக கற்பனை உலகில் அந்த பெண்ணின் கணவருக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி கவசத்தை கொடுத்து மனைவியுடன் இருக்கும் தருணத்தை உணர வைத்துள்ளனர்.

பல நாட்கள் கழித்து உயிரிழந்து தனது மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீருடன் தனது பாசத்தை பரிமாறி அவருடன் இணைந்து நடனமாடியுள்ளார். இவரது செயல்கள் அனைத்தும் வீடியோவாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பலரையும் கண்கலங்க வைத்ததுடன் இப்படியும் இனி வாழ முடியுமா என்று வியப்படையும் செய்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago