தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம்!

Published by
Rebekal

தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம் பிரேசிலில்  நிகழ்ந்துள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ஒரு 18 வயது இளைஞன் கடை ஒன்றின் உரிமையாளரிடமிருந்து கடிகாரத்தையும் பணத்தையும் திருடியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் என்றால் பல நாட்களாக இருக்கவில்லை, இரண்டு மணி நேரங்கள் தான் இருந்துள்ளார்.  அந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே உள்ளூர் போலீஸ் வளாகத்தில் இருந்த அவர் போலீசாரின் கதவில் துளையிட்டு அதன் வழியாக வெளியேற முயன்றுள்ளார். ஆனால் அந்த கதவு அவர் சிக்கியுள்ளார். இந்நிலையில் காதவில் சிக்கிய கைதியை பார்த்த போலீஸார் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைத்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் அவரை மீட்டுள்ளனர். மேலும் அந்த கதவு வெட்டி எடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை தலைவர் அவர்கள் கூறுகையில், ஒரு கடையில் திருடியதால் இவர் கைது செய்யப்பட்டார். எனவே சந்தேகத்தின் பேரில் தான் இவரை தொடர்ச்சியாக திருடுகிறார் என கைது செய்து காவல் துறையின் காவலில் வைத்து இருந்தோம், இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் இவர் தப்பிக்க முயன்று கதவு துளையில் மாட்டி கொண்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

9 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

10 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

10 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

11 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

11 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

12 hours ago