“பீஸ்ட்”ஆடியோ லாஞ்ச் மேடையில் தளபதி விஜய் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியுள்ளது.
நடிகர் விஜய் அண்மைகாலமாக தனது பட ஆடியோ வெளியிட்டு விழாவில், தன் மனதிற்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை அவ்வப்போது நடக்கும் சமூக நிகழ்வுகளையும், சுட்டிக்காட்டி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே பிகில் ஆடியோ வெளியிட்டு விழாவில், சர்க்கார் ப வெளியிட்டின் போது, அவரது ரசிகர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனை குறித்து ” என் பேனரை கிழியுங்கள் எனது ரசிகர்கள் மேல் மட்டும் கை வைக்காதிங்க” என்பது போல பேசியிருந்தார். அதைபோல் நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சனை குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பல்வேறு மேடைகளில் கூறிவருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் நேற்று ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தற்போது நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட் “என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருட இறுதிக்குள் பீஸ்ட் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் வழக்கம் போல தனக்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பேசுகையில், தனது கார் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் பற்றி பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…