தேவையற்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் – சீனாவுக்கு பதிலடிகொடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்

Published by
Venu

தேவையற்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.  

கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதன் பின்னர் தொடர்ச்சியாக உலகில் உள்ள பல நாடுகளில் பரவியது கொரோனா.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் அலட்சியமே கொரோனா பரவுவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி வந்தன.மேலும் அமெரிக்கா சீனா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.  

இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவும் சீனா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.அதாவது,கொரோனாவை சீனா மறைத்ததால் உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. இதன்விளைவாக ஆஸ்திரேலியா மற்றும் சீனா இடையே சற்று பனிப்போர் அதிகரித்தது.குறிப்பாக ஆஸ்திரேலிய மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது சீனா.பார்லி இறக்குமதிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.சீனர்கள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.சீன சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவை  தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில்,நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொண்டு வருகிறோம்.எனவே தேவையற்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.  

Published by
Venu

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago