BREAKING: இந்தியாவிற்கு ரூ.7,546 கோடி நிதி அறிவித்த உலக வங்கி.!

Published by
Dinasuvadu desk

இந்தியாவிற்கு உதவும் வகையில் ரூ.7,546 கோடி நிதி தருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  தற்போது அமலில் உள்ளது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாததால் பிரதமர் மோடி இரண்டு நாள்களுக்கு முன் மக்களிடையே உரையாற்றும்போது 4- ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும் இந்த ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்தியாவில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு அவ்வப்போது மக்களின் நலனுக்காக முக்கிய நல திட்ட அறிவிப்புகளை வெளிட்டு வருகிறது. இந்நிலையில்,  ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை மோடி அறிவித்திருந்தார். 

இந்த திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி  அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 3-ஆவது நாளாக இன்றும் ரூ.20 லட்சம் கோடி திட்டம் குறித்து விளக்கம் கொடுக்கவுள்ளார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான அறிவிப்புகளும், நேற்று வேளாண்த்துறை மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 81,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட  இந்தியாவிற்கு  உதவும் வகையில் ரூ.7,546 கோடி நிதி தருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த நிதி இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள், கொரோனா ஒழிப்பு நடவடிக்கை, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago